2022 புதிய ஆண்டில் வேலையில் பேரதிர்ஷ்டம்! இந்த 6 ராசியில உங்க ராசி இருக்குதா?

2021ம் ஆண்டில் இறுதியில் இருக்கும் நாம் இன்று சில தினங்களில் 2022 என்ற புதிய ஆண்டிற்குள் நுழைய இருக்கிறோம். பிறக்கப்போகும் புதிய ஆண்டில் நமக்கு நன்றாக அமையுமா? என்ற கேள்வி பலருக்குள்ளும் இருக்கும்.

அவ்வாறு இந்த புதிய ஆண்டில் எந்த ராசியினருக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2022ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார்.

பின்னர் வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு சென்று மீண்டும் நவம்பர் மாதத்தில் மீன ராசிக்கு செல்வார். ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார்.

நவ கிரகங்களில் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு வெளிநாடு செல்லும் யோகத்தை தீர்மானிக்கும். சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.

சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கிரகங்கள் ஆகும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புதிய ஆண்டு ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமைய இருப்பதால், வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். சனி பகவானும் லாப வீட்டிற்கு வரப்போவதால் உங்களின் வருமானமும் அதிகரிக்கும்.

வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைப்பதுடன், அரசு வேலைக்கு காத்திருப்பவர்களின் கனவும் நிறைவேறும், மேலும் ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும், ராகு கேது பெயர்ச்சியும் சாதகமான பலன்களையே தரும்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்வதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை மட்டுமின்றி சம்பள உயர்வு, அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி நிச்சயம்.

ராகு ஜென்ம ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு செல்லவதால், மன அழுத்தங்கள் நீங்குவதோடு, உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது.

புதிய வேலை கைகூடுவதுடன், வெளிநாட்டு யோகம் கை கூடியும் வருகின்றது. குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். அஷ்டம சனியின் பிடியில் இருந்து விடுபடும் காலம் வந்து விட்டது.

யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில மாதங்கள் அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம்.

கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே இந்த புதிய ஆண்டில் சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் பயணமும் பார்வையும் சாதகத்தை கொடுக்கும்.

அலுவலகங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாட்டு வேலைக்கு காத்திருப்பவர்கள் வெற்றியாகவே அமையும். பண வரவும் மனநிறைவும் கொண்ட ஆண்டாக இந்த புதிய ஆண்டு அமையப்போகிறது.

சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய அண்டு பேரும் புகழும் கொட்டுமாம். பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் ராகு பகவானால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறப்பதுடன், பெரிய அளவுவில் லாபம் கிடைக்கும்.

வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைப்பதுடன் பாராட்டுகளும் கிடைக்கும். வெளிநாடு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்.

கன்னி
அறிவின் நாயகன் புதனை நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதிய ஆண்டில் குருவின் பார்வை நேரடியாக கிடைக்கப் போகிறது. ஆண்டின் முற்பகுதியில் சில சறுக்கல்கள் வந்தாலும் ஏப்ரல் மாதம் முதலே சாதனை படிக்கட்டில் பயணம் செய்யப்போகிறீர்கள்.

வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுடன், புதிய வேலை தேடுபவர்களுக்கும், வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வரும்.

சனிபகவானும் 6ம் வீட்டிற்கு செல்வதால் கடன் பிரச்சினை நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ராகுவின் சஞ்சாரமும் கேதுவின் பயணமும் யோகங்களைத் தரப்போகிறது. புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.