சின்ன சின்ன நோயிலிருந்து விடுதலை வேண்டுமா? பயன்தரும் சில 10 மருத்துவ குறிப்புக்கள் இதோ உங்களுக்காக!

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

    • உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
    • துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப்புண் ஏற்படாது.
    • 1/4 தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3, 4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
    • காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும் ,3, 4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
    • தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும் 3, 4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
    • கடுமையான இருமல் இருந்தால் 3கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
    • பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
    • சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும், இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
    • வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.