12 ஆண்டுக்கு பின் சூரியன் குரு சேர்க்கை – ராஜயோக வாழ்க்கையை அடையபோகும் ராசியினர்கள் யார்?

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அதிர்ஷ்ட கிரகமான வியாழனும் 12 ஆண்டுக்கு பின் கும்ப ராசியில் இணைய உள்ளனர்.

இதனால், சில ராசியினர்களுக்கு சுப பலனையும், சில ராசிக்கு அசுர பலனையும் அளிக்கப்போகிறது. இந்த நிலையானது 2022 மார்ச் 15 வரை நீடிக்கும். அந்த பலன்களை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். அதிர்ஷ்டன் இனி உங்களுக்கு எப்பொழுதுமே சாதகமாக இருக்கும்.

அனைத்து பணியிலும் இனி வெற்றி உங்களுக்கு தான். புதிய வேலையை ஆரம்பிக்க இது தான் நல்ல நேரம்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு சூரிய மற்றும் வியாழன் சேர்க்கையால் நல்ல பலன்களை அடைய போகிறார்கள்.

கூட்டுப்பணி அதிக லாபத்தை தரும். சிலருக்கு இந்த நேரம் தொழில் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு மார்ச் 15 வரை காதலம் வாழ்க்கை அமோகமாக இருக்குமாம். திருமண யோகமும் கை கூடி வரும்.

திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையும், காதல் நிறைந்தாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர்களுக்கு, சூரியன் மற்றும் குரு பகவானால், புதிய இலக்குகள் எட்டப்படும். ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கிடைக்கும்.

இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.