சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கைகொடுக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்கு சிறப்பான நன்மைகள் தரக்கூடிய இடத்தில் சனி அமர உள்ளார். இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பல்வேறு வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் தேடி வரும். எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழில் வகையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் தரும் அளவிற்கான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த சனி அதிசார பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு அதற்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு அமையும்.
கன்னி
கன்னி ராசிக்கு சாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்காக முயன்று வரக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள், வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். திடீர் பண வரவு, பண ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
சனி பகவானின் சஞ்சாரம் சாதமானதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமைவதோடு, இலக்கை சிறப்பாக அடைய வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.