சனி பெயர்ச்சி பலன் 2022 : லாப சனியால் முழு அதிர்ஷ்டத்தையும் அடையும் ஒரே ஒரு ராசி எது தெரியுமா?

சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைகிறார்.

லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும்.

இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார்.

கும்ப ராசிக்கு இனி அற்புதமான காலம்

  1. லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்.
  2. தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
  3. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  4. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
  5. பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
  6. எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும்.
  7. கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும்.
  8. உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
  9. விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை.

மாணவர்களுக்கு
கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை.

நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் செலுத்துங்கள்.

இந்த 3 ராசிக்கு அடித்தது ராஜயோகம்.. சுக்கிரன் குரு எந்த மாதிரியான அதிர்ஷ்டத்தை கொடுப்பார்!

ஆரோக்கியத்தில் கவனம் தேவை
உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனி பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள்.

சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க கையில பணம் அதிகம் சேரப் போகுது!

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. லாபத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார்.

புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.

பெண்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.

பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

சனிக்கிழமையன்று அனுமனை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.