சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து….சனியால் அழிவு நிச்சயம்!

சனி பகவான் ஒரு நீதிமான். இத்தகைய சனி ஒருவரது ஜாதகத்தில் அசுப வீட்டில் இருந்தால், அது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

அதுவே சுப வீட்டில் இருந்தால், அவர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனி 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியை விட்டு வெளியேறி தனது இரண்டாவது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனி வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
ஜூன் 5 ஆம் தேதி சனி வக்ரமாவதால், கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக கவனம் தேவை. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது.

இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதை திரும்ப பெற முடியாது.

மகரம்
சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் பல மோசமான பலன்களைப் பெறப் போகிறார்கள். உத்தியோகத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு சற்று மோசமாகும்.

விருச்சிகம்
சனியின் வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மூதாதையர் சொத்து தொடர்பான சச்சரவுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.