கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கும் 4 பேரிச்சை…. யார் யாரெல்லாம் சாப்பிடலாம்?

பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டால் எடையை குறைக்கலாம்.

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டுமே எடை இழப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

இரண்டில் ஏதேனும் ஒன்றை தவறவிட்டாலும் உடல் எடையைக் குறைப்பதில் அது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

உடல் எடையைக் குறைக்கும் நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அது உடலுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் நார்ச்சத்து நிறைந்ததாகவும் அதே சமயம் கலோரிகள் குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

அப்படியான ஒரு உணவாகத்தான் பேரீச்சைப்பழம் உள்ளது.

பேரீச்சைப்பழம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
​எவ்வளவு சாப்பிடலாம்?

பேரிச்சம் பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதும், அதேபோல இரும்புச் சத்து அதிகம் கொண்டதால் பேரிச்சம் பழம் நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று பேரிச்சம் பழம் பற்றி நிறைய கருத்துகள் நிலவுகின்றன.

பேரிச்சம்பழம் அதிக இனிப்பு சுவை கொண்ட ஒரு பழம். அதை எதற்காக சாப்பிடுகிறோம், யார் சாப்பிட வேண்டும் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

உடல் எடை குறைக்க நினைக்கிறவர்கள் பேரிச்சம்பழம் மட்டுமல்ல, வேறு எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும்.

ஒரு நாளைக்கு சராசரியாக 4 முதல் 5 பேரீச்சை பேரீட்சம்பழம் வரை சாப்பிடலாம்.

இதுவே நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களாக இருநதால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

4 பேரிட்சை எப்படி உடல் எடையை குறைக்கும்?
தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும்.

எப்படி வெறும் 2 பேரிச்சம் பழம் உங்க எடையை குறைக்கிறது என சந்தேகமா இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

பசியை தூண்டாது – பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள்.

அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் – பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது.

உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

தசை வடிவம் தரும் – பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

சர்க்கரை வியாதி தடுக்கும் – சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள்
பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது.

இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.

சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும்.

தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது.

ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும்க் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.

சிறந்த பேரிச்சை எது?

  • பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது.
  • சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும்.
  • அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.

வாங்கிய பின் செய்ய வேண்டியவை

வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும்.

இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது.

தினமும்  3- 4 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.

அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்

தேவையானவை

  1. பேரிட்சை -2
  2. பசும் பால்- 1 கப்
  3. மஞ்சள் – 1
  4. சிட்டிகை தேன் – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்.

இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.