2023 சனி பெயர்ச்சி எப்போது? மரண சனியிலிருந்து யாரெல்லாம் விடுபடுவார்கள்? ஆட்டிப்படைக்க போகும் ஏழரை

ஏழரை சனி காலத்தில் ஒரு நபருக்கு சில பாடங்கள் எடுத்து, அவரை எழ வைத்து, சில நல்ல வெகுமதிகளையும் கொடுத்து சனி விலகுவார்.

சனி பகவான் மகரத்தில் முறையாக சஞ்சரித்து வருகிறார்.

இவர் அக்டோபர் 23ம் தேதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார்.

சனி பகவான் 2023 ஜனவரி 17ம் தேதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

2023 சனி பெயர்ச்சி யாருக்கு விடுதலை
தற்போது மகரத்தில் சஞ்சரிப்பதால், அதற்கு முன் உள்ள கும்ப ராசிக்கும், மகரத்திற்கு பின் உ ள்ள ராசியான தனுசு ராசிக்கு ஏழரை சனி காலம் நடக்கும்.

2023ல் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது, தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து விடுதலை அடைவார்கள்.

​மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என்றால் என்ன?

மங்கு சனி
ஒருவர் பிறந்து 30 வயதுக்குள் முதன் முறையாக வரக்கூடிய ஏழரை சனி காலம் மங்கு சனி என்று குறிப்பிடலாம்.

முதல் முறை வரும்போது, சனியின் கடுமையான தாக்கம் பெரியளவில் தாக்கம் தராது.

சொல்லப்போனால் ஏழரை சனி நடப்பது போன்றே இருக்காது. இந்த காலத்தில் பொருள், நிதி வரவு சிறப்பாக இருக்கும். பெரிய தாக்கம் ஏற்படாது.

பொங்கு சனி
30 வயதிலிருந்து 60 வயதிற்குள், இரண்டாவது முறை வரக்கூடிய ஏழரை சனி காலம் கூடுதல் கடுமையானதாக இருக்கும்.

இந்த காலத்தில் ஒருவரின் வாழ்க்கையே திசை திரும்பக்கூடியதாக இருக்கும். இரண்டாவது ஏழரை சனி காலமான பொங்கு சனி காலத்தில் ஒருவர் கடுமையான அனுபவங்களை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

கர்மாவிற்கு ஏற்றபடி அவரின் காலம் மிக கடுமையானதாகவோ அல்லது பெரிய பாதிப்பில்லாமல் நாட்கள் நகரும். அதே போல சனி ஜாதக கட்டத்தில் இருக்கும் வலுவின் அடிப்படையில் பலன் இருக்கும். துன்ப அனுபவங்கள் தருவார்.

இந்த காலத்தில் ஒருவர் வழக்கமாக செய்யும் பணியை பாதிக்கிறார். அவரின் நம்பிக்கையை உருக்குலைத்து, சில தவறுகளை உணர்த்தி பாடம் புகட்டுவார். இந்த காலத்தில் புதுவிதமாக பாடம் எடுப்பார். வாழ்க்கை பாதையை ஏற்படுத்துவார்.

மரண சனி
ஒருவரின் வாழ்நாளில் மூன்றாவது முறையாக வரக்கூடிய ஏழரை சனி காலம் மரண சனி என குறிப்பிடலாம். அப்போது அந்த ஜாதகருக்கு கடினமான உடல் நலப் பிரச்னைகள், உடல் வலுவின்மை ஏற்படலாம்.

அவருக்கு மரண துன்பம், துயரத்தை அனுபவிக்க வைப்பார். அந்த நேரத்தில் அந்த ஜாதகருக்கு நல்ல தசை, புத்தி நடந்தால் பெரிய பிரச்னையை சந்திக்க மாட்டார். இல்லையேல் அவருக்கு மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

3வது முறையாக வரும் சனியால் அந்த நபர் பூலோகத்தைவிட்டு இறைவனை சரணடையக்கூடிய காலம் எனலாம். அதனால் வயதான காலத்தில் நாம் இறைவனை சரணடைந்து நாம் முக்தி பெற வழியைத் தேட வேண்டும்.

சனி பெயர்ச்சி 2023 எப்போது?

வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த நேரத்தில் சனி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

இதனால் மகர ராசிக்கு ஏழரை சனியின் கடைசி பாகம் என்பதால் துன்பங்கள் குறையும். கும்ப ராசிக்கு ஜென்ம சனி ஆர்மபிக்கும். இதில் கும்பத்திற்கு மத்திம பலன்கள் கிடைக்கும்.

மின ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கும். இதனால் மீன ராசிக்கு பாடங்கள் ஆரம்பிக்கும்.