ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் தளபதியான செவ்வாய், அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார்.
மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு இந்த மாற்றம் சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும்.
இருப்பினும், செவ்வாயின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்
மேஷம்: மேஷ ராசியின் எட்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் என்பதால் மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்த நேரத்தில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும்.பண அபிவிருத்திக்கான நேரம் இது. வியாபாரம் செய்வதற்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.
சிம்மம்: மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு முதலீட்டில் லாபத்தை அள்ளித்தரும். இந்த காலகட்டத்தில் அலுவலக பணிகளில் இருப்பவர்களின் சம்பளம் உயரும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
கன்னி: வேலையில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாகும். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கும் இது லாபகரமான நேரமாக இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
மகரம்: இந்தப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். விளையாட்டுப் போட்டி மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். மகர ராசிக்காரர்களின் உடல்நிலை நன்றாக இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். இது அவர்களின் நிதி சிக்கல்களை நீக்கும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகள் இடையிலான அன்பு அதிகரிக்கும்.