இந்த ஐந்து ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பரிசாகக் கொண்டு வரப்போகும் புத்தாண்டு!

ஜோதிட அறிவியலைக் கொண்டு, நம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை ஓர் அளவிற்கு அனுமானமாக நாம் தெரிந்துகொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு பலரின் வாழ்வில் மகிழ்ச்சியை பரிசாகக் கொண்டு வரப்போகிறது.

வேலையில் மாற்றம், பதவி உயர்வு, புதிய தொழில் தொடங்குவது என பணி தொடர்பான ஆக்கப்பூர்வமான பல மாற்றங்கள் ஏற்படலாம். 5 ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

மேஷம்:
எதிர்வரும் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்கள் சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தால் தொழிலில் பெரிய பலன்களைப் பெறலாம். இந்த நபர்களின் அதிர்ஷ்டம், பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

நல்ல சம்பளத்தில் புதிய வேலையைப் பெறலாம். தொழில் சார்ந்த பயணங்கள் இருக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு, 2023ம் ஆண்டு பணி தொடர்பான புத்துணர்ச்சி தருஅம் ஆண்டாக இருக்கும்.

சிம்மம் :
புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் அற்புதமாக அமையப் போகிறது. இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய வேலையின் மூலம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளும் இருப்பதைத் தெரிந்து மகிழ்ச்சி கொள்வார்கள்.

குடும்பத்தில், பிள்ளைகளின் பணியிலும் திருப்தி இருக்கும் என்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு தொழில் நிமித்தமான நிறைவைத் தரும்.

துலாம்:
எதிர்வரும் 2023 – ஆண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும் நன்மை பயக்கும். வேலை தேடுபவர்களின் தேடல் முடிவடையும். உங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு :
புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கும் அருமையானதாக இருக்கும். உத்தியோகம் மற்றும் வேலையில் நல்ல பலன் தருகிறது. இவர்களுக்கு பதவி உயர்வும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறலாம்.

கும்பம்:
2023-ம் ஆண்டு கிரகப்பெயர்ச்சி, கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைத்து மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள்.