புத்தாண்டில் சுக்கிரனுடன் இணையும் சனி பகவான்! நல்ல பலன்களை பெறப்போகும் 4 ராசிகள்

சனிப் பெயர்ச்சி 2023:
சனி பகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் வாழ்வின் வளத்திற்கு காரணமான சுக்கிரனின் நிலையுடன் இணைத்து சனிப்பெயர்ச்சியின் தாக்கங்களைப் பார்க்கும்போது சில ராசிகளுக்கு புத்தாண்டு அருமையானதாக இருக்கும்.

2023 ஜனவரி 17ம் திகதி, ஜோதிடத்தில் மிகவும் சிறப்பான நாள். சனீஸ்வரர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.

சுக்கிரனும் சனியும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுப்பார்கள் என்று தெரிந்துக் கொள்வோம்.

ரிஷபம்:
சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் முற்றிலும் மாறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். வேலையிலும் லாபம் கிடைக்கும். ஏழாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம்:
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். மேலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களின் நிதி நிலை பலப்படும். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சனியின் சஞ்சாரம் நன்றாக இருபதால், வணிகம் அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் காண சனீஸ்வரர் உதவுவார்.

துலாம்:
சுக்கிரன் மற்றும் சனியின் சஞ்சாரத்தினால், துலாம் ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்த சூழல் நிலவும். சுக்கிரன் சஞ்சாரமும், சனிப் பெயர்ச்சியும் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயங்கள் ஏற்படும்.