புத்தாண்டில் ராகுவின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ராகு கிரகம் ஒக்டோபர் 30, 2023-ல் கும்பத்தின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கும். இந்த மூன்றாவது வீடு குறுகிய பயணங்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடனான உறவுகளுடன் தொடர்புடையது.

இதுபோன்ற சூழ்நிலையில், கும்ப ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உறவுகளில் பிரச்சனை வரலாம்:
ராகுவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வீட்டில் சண்டைகளை அதிகரிக்கலாம். இவர்களுக்கு அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உடன் பிறந்தவர்களுடனான உறவுகள் மூதாதையர் சொத்துக்காக கெட்டுப்போகலாம்.

திருமணமாகாதவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் அந்த யோகம் கிட்டும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு. ஏற்கனவே திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

முதலீடு செய்வதற்கு முன்பு சிந்தியுங்கள்:
கும்பம் ராசிக்காரர்கள் எந்த ஒரு முதலீட்டிலும் பணத்தை முதலீடு செய்யும் முன் அதன் லாப நஷ்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பணத்தைக் கண்காணித்து, முடிந்தவரை கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.

உங்கள் பயணத்தின் போது உங்கள் சாமான்கள் திருடப்படலாம் அல்லது சேதமடையலாம். எனவே கவனமாக இருங்கள். நீங்கள் ஏமாற்றப்படவும் வாய்ப்புகள் உண்டு. தொண்டு பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

பழைய நோய்கள் வெளிப்படும் :
2023-ம் ஆண்டு ராகு சஞ்சாரம் செய்வதால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கலாம்.

முதுகுத் தண்டு தொடர்பான பழைய பிரச்னை மீண்டும் வெளிப்படும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள் மற்றும் தினமும் 3-4 கிலோமீட்டர் நடக்க முயற்சி செய்யுங்கள். தெரு உணவுகளை தவிர்க்கவும்.

வேலை – வியாபாரத்தில் முன்னேற்றம் :
2023 ஆம் ஆண்டில் ராகு சஞ்சாரத்தின் நிலை உங்களுக்கு வேலை அல்லது வணிகத்தின் அடிப்படையில் சாதகமாக இருக்கும். சமூகத்தில் உங்களின் பதவி, கௌரவம் கூடும். வேலை தொடர்பாக நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும்,

இதன் காரணமாக நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் அது உங்கள் தொழிலை மேம்படுத்த உதவும். மார்க்கெட்டிங் துறை மற்றும் இராணுவம், காவல்துறை பணிகளில் இருப்பவர்கள் அதிக பலன்களைப் பெறலாம்.