சனி பகவான் எப்போது சுப பலன் தருவார், எப்போது அசுப பலன் தருவார் என்பது பலரிடம் எழும் கேள்வி.
அதுமட்டுமல்லாமல் சனியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழும்.
சனி பகவான் கெடு பலன் மட்டும் தான் தருவாரா?
அதற்கு பதில் இல்லை என்பதே. ஏனெனில் நவகிரகங்களை சுப மற்றும் அசுப கிரகங்கள் என பிரிக்கின்றனர். சுப கிரகங்களாக இருந்தாலும், அசுப கிரகமாக இருந்தாலும் எப்போதும் கெடு பலனை மட்டுமே தரும் அல்லது எப்போதும் சுப பலன் மட்டுமே தரும் என்பது இல்லை.
அவர் அமர்ந்துள்ள இடத்தைப் பொறுத்து, மற்ற கிரகங்களின் பார்வையின் தாக்கம் ஆகியவை அடிப்படையில் தான் பலன் நமக்கு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ அமையும் என்று கூறப்படுகிறது.
சனி பகவான் எப்படிப்பட்டவர்
நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவானின் மகன் சனி பகவான்.இவர் நீதி அரசனாக, கர்ம காரகன், மந்தன் என அழைக்கப்படக்கூடியவர்.
அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலனை கொடுக்கக்கூடியவர். அதன் அடிப்படையில் ஒருவருக்கு செழிப்போ அல்லது வருமையோ ஏற்படலாம்.
சனி பகவான் ஒருவருக்கு சோம்பேறித் தனம், வலிமையற்ற, பழமையான எண்ணம், கூர்மையான, தமோகுனி, ஆண் ஆதிக்க குணத்தைத் தரக்கூடியவர்.
சனி பகவானுக்குக் கருப்பு, துவர்ப்பு சுவை பிடிக்கும்.
அடிமைத் தொழில், உடல் உழைப்பு, கெளரவம் இல்லாத செயல், இரும்பு தொழில் உள்ளிட்டவற்றைச் செய்ய வைப்பவர். இவரின் வாகனம் காகம்.
சனி பகவான் அசுப பலன் தரும் விஷயங்கள்
இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்.
சனி பகவான் தூதர், சட்டம், கைவினை, தத்துவம், வேலைக்காரன், தந்திரம், மந்திரம் மற்றும் கருவி ஆகியவற்றின் பிரதிநிதி.
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நீதித்துறை மீதும் சனிக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்படுகிறது.
உளர் நிலம் அவரின் உறைவிடம்.
ஒருவரின் நரம்பு மண்டலம் மற்றும் கால் ஆகியவற்றைப் பாதிக்கக் கூடியவர்.
இவரின் தாய் சாயா தேவி. மற்றும் நண்பர்கள் ராகு மற்றும் புதன். ராகு மற்றும் புதன் சனியின் தோஷங்களை நீக்கும்.
சனியின் சஞ்சாரம் வலுவாக இருக்கும்போது, அதனுடன் தொடர்புடையவர்கள் முன்னேறுவார்கள்.
சனி பகவான் கோள்சார பெயர்ச்சியின் போது அவரின் ஏழரை சனி காலத்தில் அதிக அசுப பலனைத் தரக்கூடியவராக இருப்பார்.
சனியின் நல்லருள் பெற்றிட செய்ய வேண்டியவை
இறை வழிபாடு செய்யவும்.
தான, தர்மங்கள் செய்யவும்.
உங்கள் வேலையில் நேர்மையுடன் நடந்து கொள்ளவும்.