சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான சுக்கிரன் தற்போது கும்ப ராசிக்குள் இடம்பெயர்ந்துள்ளார்.

மார்ச் 15ஆம் திகதியான இன்று செவ்வாயும் கும்ப ராசிக்குள் நுழைவதால் இந்த இணைப்பு தனலட்சுமி யோகத்தை உருவாக்குகின்றது.

இந்த யோகமானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது. அப்படி பண மழையில் நனைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும்.

இதுவரையில் தடைப்பட்டு வந்த காரியங்கள் விரைவில் நடந்து முடியும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர போகின்றது. தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகத்தால் நிதி ரீதியான முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நல்ல செய்திகள் தேடிவரும். இதுவரையில் இருந்த பண கஷ்டங்கள் விரைவில் நீங்கும்.

துலாம்
துலா ராசியினருக்கு இந்த யோகத்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்கள் தடைப்பட்டு வந்த விடயங்கள் இலகுவில் நடந்தேரும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகத்தால் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.