குரு சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு மற்றும் சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி அன்று இணைய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது.

இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர்.

மேஷம்

  • வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

ரிஷபம்

  • நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடகம்

  • வீடு வசதிகள் ஆடம்பரம் என அனைத்தும் உங்களுக்கு அதிகரிக்க போகின்றது.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
  • உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.
  • நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும்.
  • வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.

துலாம்

  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும்.
  • வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும்.
  • ஆடம்பரத்திற்கு இந்த குறையும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.