குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் மே 1 ஆம் திகதி குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

குறித்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.

அவ்வாறு குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு குரு பெயர்ச்சி பல வழகளிலும் சாதக பலன்களை கொடுக்கவுள்ளது. இது வரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் ரீதியாக சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளதால், இவர்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு அமையும். வெளியூர் பயணம் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும். கடன் தொல்லைகள் நீங்க ஆரம்பிக்கும்.

மிதுனம்

மிதுன் ராசியினருக்கு குரு பெயர்ச்சி மகிழ்ச்சிக்கான வாழ்க்கையை கொண்டு வரும். திருமணமாகதவர்களுக்கு வரன் கூடிவரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சிகைகள் தீர்க்கப்படும். சொத்துக்கள் வாங்குவதற்காக வாய்ப்புகள் அமையும்.