இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது… உங்க ராசி என்ன? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும்.

குறிப்பாக வியாழன் இடப்பெயர்வு அதாவது குருபகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகின்றது. காரணம் குரு ராசியில் அமர்வதோ அல்லது குருவின் பார்வை ஒரு ராசியின் மீது படுவதோ அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியை கொடுக்கும்.

அந்த வகையில் 12 ஆண்டுகளின் பின்னர் கடந்த மே 1 ஆம் திகதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். குறித்த நிகழ்வு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குபேர யோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணப்பிரச்சினை வருவதற்கு வாய்ப்பே இருக்காது. அப்படி குபேர யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

குரு மாற்றத்தால் ஏற்பட்ட குபேர யோகம் சிம்ம ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாழ்வில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாத வகையில் பணவரவு அதிகரிக்கும். கடன்தொல்லைகள் அனைத்தும் நீங்கி பணத்தை சேமிக்கும் நிலை உருவாகும்.

கன்னி

குரு பெயர்ச்சியால் உருவாகியுள்ள குபேர யோகம் கன்னி ராசியினர் வாழ்வில் பாரிய திருப்பு முனையாக அமையப்போகின்றது. தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் காணும். அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

ரிஷபம்

குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்திருப்பதால் ரிஷப ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அடுத்த ஒரு வருடதிற்குள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு காணப்படுகின்றது. திருமண வாழ்வில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறக்கும்.