உருவாகும் புதாத்திய ராஜ யோகம்.., கட்டுக்கட்டாக பணம் பெறப்போகும் 3 ராசியினர்! இந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா?

சூரியன், மே 14, 2024 அன்று, மாலை 05:41 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

அதன் பிறகு, சரியான புத்தியைத் தரக்கூடிய புதன் கிரகம் மே 31ஆம் தேதியன்று, மதியம் 12:02 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறது.

இப்படி ரிஷப ராசியில் சூரியனும் புதன்பகவானும் சேர்வதால் புதாத்திய யோகம் உண்டாகிறது.

இந்த புதாத்திய யோகம் குறிப்பிட்ட 3 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ரிஷபம்

  • இந்த காலகட்டத்தில் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருப்பவர்களின் மனதில் நிம்மதி இருக்கும்.
  • திருப்தி பிறக்கும்.
  • சொந்த ஊரில் வசிக்கும் ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
  • உங்கள் அலுவலகங்களில், அலுவலக அரசியலால் பிரச்னைகளைத் தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் சாதகமான விளைவுகள் வந்துசேரும்.
  • திருமணம் கைகூடாத ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் வரன் கைகூடும்.
  • கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • பாசம் கூடும்.
  • தொழில் முனைவோர்களுக்கு புதாத்திய ராஜயோகத்தால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கடகம்

  • இக்காலகட்டத்தில் இறை நம்பிக்கை மற்றும் இறைத்தொண்டுகளை அதிகம் செய்வீர்கள்.
  • கடக ராசியினருக்கு வருவாய் முன்பிருந்ததைவிட சற்று அதிகரிக்கும்.
  • மேலும் கடக ராசியினருக்கு இருந்த உளச்சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவை நீங்கும்.
  • வெளிநாடு செல்வதற்கு முயன்றால் இக்காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும்.
  • தொழிலை விரிவுசெய்ய நாடு முழுவதும் பயணம் செய்வீர்கள்.
  • மிகுந்த சிரத்தையுடன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று வெல்வார்கள்.

சிம்மம்

  • இந்த புதாத்திய ராஜயோகத்தால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமான காலகட்டமாகும்.
  • வணிகர்களுக்கு வருவாய் பெருகும்.
  • அதிக லாபம் கிடைக்கும்.
  • அதேசமயம், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
  • அரசு வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் இக்கட்டத்தில் உருவாகும்.